Saturday, 25 February 2012

விரதம்

என் மனக்கருவரையில்
கடவுளோ நீ
உன்னை கண்டதும்
என் மொழி விரதம் இருக்கிறதே  

Monday, 6 February 2012

பயம்

ஒவ்வொரு பிறந்த தினம் வரும் போதும் ஒரு சிறு பயம் மனதில் வரத்தான் செய்கிறது 

வயது கூடுவதால் வரும் பயம் அல்ல "என் வயதிற்கு தகுந்த மன முதிர்ச்சியை அடைந்துவிட்டேனா என்ற குழப்பத்தால் வரும் பயம் ".

எங்க ஊருப்பக்கம் ஒன்னு சொல்லுவாங்க " வயசுதான் ஆகுது கழுதைக்கு   ஆகுரப்புல ஆனா வயசுக்கு தகுந்த அறிவிருக்க பாருன்னு " ஒருவேளை அதனால் வந்த குழப்பமாக இருக்குமோ 

என்ன செய்ய குழப்பத்துலையே   ஓடுது வாழ்கை      

Sunday, 5 February 2012

படித்ததில் பிடித்தது

உலகப்புகழுக்கு ஒன்பது கட்டளைகள்  

1.அழகிய கனவு ஒன்று வேண்டும்.  

2.அதை அடைவதற்குக் கடும் முயற்சி வேண்டும்


3.அவமானம் பார்க்காத குணம் வேண்டும் 

4.தூக்கம் தவிர்க்கப் பழக வேண்டும் 

5.சிறிய வாய்ப்புகளை நிராகரிக்காமலிருக்க வேண்டும் 

6.ஏமாற்றங்களை விழுங்க வேண்டும் 

7.உள்ளத்தில் ஒரு வெறி ஓயாது புயலாக வீசிக் கொண்டிருக்க வேண்டும்

8.உழைப்பில் உண்மை வேண்டும்

9.அனைத்துக்கும் மேலாகப் பொறுமை வேண்டும்   
  

துளி

எதிர்பார்புகள்  குறைவாக  இருக்கும் பொழுது 
ஏமாற்றங்களும் குறைவாகவே இருக்கும்