Tuesday, 20 March 2012

நட்பு


ஓங்கிக் கேட்கும் மனதின் இரைச்சல்
அதையும் தாண்டி மெல்லிய 
மயிலிறகாய் வருடும் தென்றல் 

இருண்ட நடுநிசியில் மின்மினியாய்
நம்பிக்கை கொடுக்கும் ஒளி

நற்பாதையில் என்னை அழைத்துக் கொண்டு 
நிற்காமல் ஓடிய நதி 

என்னை நிர்மூலம் ஆக்க விழுந்த 
இடியை எனக்காய் தாங்கிய மலை 

என் மனதை ஆட்கொண்ட தீயவைகளை 
எரித்த நெருப்பு 

என்றுமே எனக்காய் யோசித்த என் அன்னை 
தென்றலாய் , ஒளியாய் , நதியாய் , மலையாய் 
நெருப்பாய் , அன்னையாய் 

நீ எத்தனை அவதாரங்கள் கொண்டாலும் 
நான் உன்னை அழைப்பது ஓர் ஒற்றை
சொல் கொண்டுதான் 

          "நட்பே "

4 comments:

  1. முந்தைய எல்லா பதிவுகளைவிட இதுதான் ரொம்ப நல்லாருக்கு...:)

    ReplyDelete
  2. Replies
    1. i don't know abt word verification but i should try to know that soon and i will made the corrections anna

      thank you

      Delete