நிலைத்திருக்கும் நினைவுகள்
**************************
பிறந்து வளர்ந்த இடம் மனதில் பயிரிட்டதோ
ஆயிரம் ஆயிரம் நினைவுகள்
அவையாவும் நான் ஆடிய களத்தையும்
வாடிய கணத்தையும் தன்னுள் உயிராய்
**************************
பிறந்து வளர்ந்த இடம் மனதில் பயிரிட்டதோ
ஆயிரம் ஆயிரம் நினைவுகள்
அவையாவும் நான் ஆடிய களத்தையும்
வாடிய கணத்தையும் தன்னுள் உயிராய்
சேமித்து இன்றும் செழித்து
வளர்ந்து கொண்டே இருக்கிறது
தாய் மாமனின் உயிரம் கண்டு அஞ்சி
அன்னையின் சேலைத் தலைப்பில் ஒளிந்த கணம்
வீட்டு கடைக்குட்டியாய் அல்லி ராஜ்ஜியம்
நடத்திய என் வீட்டு முற்றம்
அக்கா அண்ணன் என எல்லோரும் ஏங்கி நிற்க
என்னை மட்டும் வாரச் சந்தைக்கு
அழைத்துச் செல்லும் பாட்டி
எப்பொழுது உண்டாலும் ஆசையாய் எனக்கு
உணவை ஊட்டாமல் தான் உண்ணாத சிற்றப்பா
பள்ளி விடுமுறையில் அண்ணனே மன்னனாய்
தட்டாமல் பின்பற்றும் சேனை என நாங்கள்
அண்ணன் தலைமையில் மீன் பிடித்த குட்டையும்
களிமண் எடுத்த மாமன் வீட்டுக் காடும்
இன்று காணும் போது வெறும் ஏக்கம் மட்டுமே
காடை விரட்டிய சோளக்காடும்
பாம்பை கண்டு பதறிய ஏரியும்
நீச்சல் கற்றுக் கொடுத்த பக்கத்து வீட்டு அண்ணனும்
மிதிவண்டி ஓட்டிப் பழக்கிய ஆசை அக்காள்களும்
முதல் முதலில் ஓட்டிய அப்பாவின் வண்டியும்
ஐந்தாவது படிக்கும் பொழுது வீட்டுக்குக்
கொணர்ந்த தொலைக்காட்சிப் பெட்டியும்
பள்ளிக் காலத்தில் எழுதிய முதல் கவிதை
போட்டிகள் பெற்றுத் தந்த பரிசு
இன்றும் பசுமையாய் தொடரும் நட்பு
இன்னும் இன்னும் இன்னும்.................
எத்தனையோ ஆயிரம் நினைவுகள்
மூச்சு முட்டும் இத்தனை நினைவுகளும்
நிலைத்திருக்கும் எக்காலத்திற்கும்
வளர்ந்து கொண்டே இருக்கிறது
தாய் மாமனின் உயிரம் கண்டு அஞ்சி
அன்னையின் சேலைத் தலைப்பில் ஒளிந்த கணம்
வீட்டு கடைக்குட்டியாய் அல்லி ராஜ்ஜியம்
நடத்திய என் வீட்டு முற்றம்
அக்கா அண்ணன் என எல்லோரும் ஏங்கி நிற்க
என்னை மட்டும் வாரச் சந்தைக்கு
அழைத்துச் செல்லும் பாட்டி
எப்பொழுது உண்டாலும் ஆசையாய் எனக்கு
உணவை ஊட்டாமல் தான் உண்ணாத சிற்றப்பா
பள்ளி விடுமுறையில் அண்ணனே மன்னனாய்
தட்டாமல் பின்பற்றும் சேனை என நாங்கள்
அண்ணன் தலைமையில் மீன் பிடித்த குட்டையும்
களிமண் எடுத்த மாமன் வீட்டுக் காடும்
இன்று காணும் போது வெறும் ஏக்கம் மட்டுமே
காடை விரட்டிய சோளக்காடும்
பாம்பை கண்டு பதறிய ஏரியும்
நீச்சல் கற்றுக் கொடுத்த பக்கத்து வீட்டு அண்ணனும்
மிதிவண்டி ஓட்டிப் பழக்கிய ஆசை அக்காள்களும்
முதல் முதலில் ஓட்டிய அப்பாவின் வண்டியும்
ஐந்தாவது படிக்கும் பொழுது வீட்டுக்குக்
கொணர்ந்த தொலைக்காட்சிப் பெட்டியும்
பள்ளிக் காலத்தில் எழுதிய முதல் கவிதை
போட்டிகள் பெற்றுத் தந்த பரிசு
இன்றும் பசுமையாய் தொடரும் நட்பு
இன்னும் இன்னும் இன்னும்.................
எத்தனையோ ஆயிரம் நினைவுகள்
மூச்சு முட்டும் இத்தனை நினைவுகளும்
நிலைத்திருக்கும் எக்காலத்திற்கும்


