என் காலக் கடிகாரத்தின் முட்கள் கிழித்த
மெல்லிய திரை விலக்கி
எங்கிருந்தோ புது உறவாய் வந்தாய்
என்னில் நான் உணராத எனை எனக்குணர்த்தி
இதயத்தின் இறுதிவரை இறங்கிவிட்டாய்
நட்பு சொல்லிய கணங்களில் நண்பனாய் நிமிர்ந்தாய்
அன்பு அணைத்த கணங்களில் அன்பனாய் சிறந்தாய்
முட்களாய் முரண்பட்ட வெகு சில நொடிகளும்
மறக்க மலராய் மலர்ந்து நின்றாய்
நான் எனை மறக்கும் நாட்கள் வரினும்
அன்பே உருவாய் என்னை அரண் என
காக்கும் உன்னை என்றும் மறவேன்
கண்கள் என்றும் காணாத
உள்ளம் மட்டுமே உணரும் உயிராகிய
உணர்வின் நிழலாய் தொடரும் உறவு நீ !

This comment has been removed by a blog administrator.
ReplyDelete