Sunday, 23 March 2014


அன்பின் முழுவுரு நீ
~~~~~~~~~~~~~~~~~~

அன்பின் ஆழம் உணர்த்தி
ஆதி முதல் அந்தம் பகிர்ந்து 
இனிதாய் பல கதைகள் பேசி
ஈகையில் இமையம் தொட்டு
உறவுக்குப் பாசம் உணர்த்தி
ஊக்கம் கொண்டு உழைத்து 
எண்ணங்களில் தீமை நீக்கி
ஏழையர்க்கு நன்மை செய்து
ஐய்யன் பெருமாள் நாமாம் நிதமும் துதித்து
ஒளி வீசும் கண்களில் காதல் உணர்த்தி
ஓய்வின்றி உனையே சிந்திக்க வைக்கும் அன்பின் முழுவுரு நீ......



கல்வி
******

கற்காலம் கடந்தும் மிருகத்தனத்தில் மாற்றம் இல்லை 
நாகரிக மாற்றம் இங்கு மனிதம் போற்றவில்லை
குரங்கிலிருந்து பிறந்த குடி கூத்தாடுதல் சகிக்கவில்லை
உடைகள் மாறினும் உள்ள புத்தி மாறவில்லை
கடல் கடந்துக் காடுகள் அழித்துக் கற்றது ஒன்றுமில்லை
படிப்படியாய் பாடம் வகுத்து பள்ளி ஒன்று கட்டிவைத்து
காலம் எல்லாம் கற்றுத் தந்து கடைசியில் பலனோ ஒன்றுமில்லை

ஏட்டுப் படிப்பு ஏட்டோடு போக
பார்த்துக் கற்றது பலனற்றுப்போக
பள்ளி சொல்லும் பாடம் தான் என்ன
தாய்மொழி மறக்கச் செய்து
சுயநலம் யாதனப் புத்தி புகட்டி
மனிதம் கொன்று புசிக்கத் துடிக்கும்
வெறியை வளர்த்து வெற்றி கொண்டு
வீரநடை போடும் பகுத்தறிவற்ற கல்வி

மனிதம் போற்றும் மானுடக் கல்வி வேண்டும்
படிப்பில் பகுத்தறிவு வளர்தல் வேண்டும்
தாய்மொழி மகத்துவம் புரிதல் வேண்டும்
இல்லைகள் ஏதுமற்ற மனித மனம் போற்றும்
கல்வி வேண்டும்
பாரதம் கல்வியில் புதுப்புரட்சி காண வேண்டும்.

Wednesday, 29 January 2014

தோழமை எனப்படுவது யாதெனில் 
*******************************

உறவுகளில் உயர்ந்தது 
உள்ளப் புரிதலில் வளர்வது 
உலகில் சிறந்தது
சுயநலம் அற்றது
ஆதி முதல் அந்தம் யாவும் பகிர்வது
கள்ளமில்லா அன்பைச் சுமப்பது
முற்றும் விரசமற்று உரைப்பது
காதல் காமம் தொடாது கண்ணியம் காப்பது
கொண்ட அன்பு குறையாமல் இறுதிவரை பயணிப்பது
சோர்ந்து போகும் தருணம் உயிர் ஜீவன் அளிப்பது
ஒவ்வொரு கணத்திலும் இன்பம் சேர்ப்பது
குரோதம் கோபம் கடந்தது
அறிவற்று நாவிடறிய கணங்களை மறப்பது
நட்பெனும் ஒற்றைச் சொல்லில் அழியாப்பந்தம் போற்றுவது
முடிவின்றி வார்த்தைகள் அற்று தொடர்வது

தோழமை எனப்படுவது யாதெனில் .........................................
என்றேன்றும் ஆச்சர்யங்கள் நிறைந்தது