Tuesday, 24 January 2012

பொதுமொழி


அளவுக்கு மின்ஜினால் அமிர்தமும் நஞ்சு - இந்த பழமொழிக்கு ஏற்ற இரண்டு உதாரணம் முகநூலும் (FACEBOOK) , கிரெடிட் கார்டும் (CREDIT CARD).
இந்த இரண்டும் சரியாகவும் ,அளவாகவும் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு அமுதம்,தவறினால் உயிரை குடிக்கும் நஞ்சாகிவிடலாம்.

நம்ம பாசைல சொல்லனும்னா
 
ஜாக்கிரதயா இருக்கனும் மாப்பு இல்ல வச்சுடும் ஆப்பு.
  





      

அழகு

எல்லாமே அழகு தான் 
இயற்கையின் படைப்பில் 
அது அருமை , சுமார் , பிரமாதம் ,
நன்றாக இல்லை என முரண்படுவது  
(மனதின்) மனிதனின் பார்வையில்தான் 

Monday, 23 January 2012

நந்தலாலா

 "ஒன்னுக்கு ஒன்னு ஒன்றிணைந்த இந்த உலகத்துல அன்பு மட்டும் இங்கு அனாதையா " - நந்தலாலா திரைபடத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் . "நந்தலாலா " இந்த திரைப்படம் மிஸ்கின் இயக்கி நடித்த படம் .பாடல் வரிகள் போலவே படமும் அருமையான ஒரு கவிதை தான்.மிஸ்கின் படங்களில் வாய் மொழிக்கான தேவை மிகவும் குறைவுதான்.

        மெளனம் சொல்லும் மனதின் வலியும்,உடல் மொழியால் சொல்லப்படும் உள்ளது உணர்வுகளும் அருமை .


Saturday, 21 January 2012

சிதறல்கள்

மெளனத்தால் உணர்த்த முடியாத மனதின் வலியை எத்தகைய வார்த்தையாலும் சொல்லி விட முடியாது
  -------------------------
காதல்
ஒரு இனிய வார்த்தைதான்
ஆனால் ஒரு தாய்க்கு
அது எச்சரிக்கை உணர்வைத்தான் தருகிறது


                           
  

Friday, 20 January 2012

சிறுதுளி

எந்த ஒன்றில் நிறைவை காண்கிறோமோ 
அதில் தான் ஒரு சிறு தவறையாவது கண்டுபிடிக்க
துடிக்கிறது   நம் மூளை //////  

Wednesday, 18 January 2012

தை திருநாள்

நகரத்து மண்ணில் மவுனமாய்
மரணித்திருந்த மனது
சொந்த மண்ணின் சுவாசம்
நிறைந்த ஈரக் காற்றால்





உயிர் பெற்று திரும்பி இருக்கிறது
சொந்தங்களுடன் இணைத்த
தை திருநாளுக்கு ஒரு கோடி
நன்றி .........................

 

Friday, 13 January 2012

தந்தையாக தன் மகளுக்கு
எதையும் விட்டுக் கொடுக்கும்
ஆண்கள்
கணவனாக தன் மனைவிக்கு
 எதையும் விட்டுக் கொடுப்பதில்லை
   

Thursday, 12 January 2012

     

     ***கண்கள்****

உள்ளத்து உணர்வுகளை 
சொல்லும் கண்ணாடி   


**அம்மா**
எத்தனை முறை
கூப்பிட்டாலும் 
அலுக்காத ஓர் 
அற்புத வார்த்தை 


Wednesday, 11 January 2012

யாரிடமும் எங்கிருந்தும் எதையும் எதிர்பார்காதவர்களே இந்த உலகில் நிம்மதியான மனிதர்கள்.      

Sunday, 8 January 2012

முரண்





பறவைகள் 
தன் குஞ்சுகள் 
இறை தேடும் பருவம் 
 வந்தவுடன் அதை தன்னிடம் 
இருந்து பிரித்துவிடுகிறது  



மனிதன் தன் தேவை முடிந்து 
சுய சம்பாதனை வந்தவுடன் 
பெற்றவர்களை முதியோர் 
       இல்லத்திர்க்கு 
அனுப்பி விடுகிறான்




Monday, 2 January 2012

புதியவள் தமிழ் ஓவியா

வலை பதிவர்களுக்கு வணக்கம் ,


முதல் முறையாக வலை பதிவுகள் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி, வலை பதிவுகளுக்கு புதியவளான  என்னையும் நட்பின்  கரம் கொண்டு ஏற்பிர்கள் என நம்புகின்றேன்.




                                                                                                நட்பின் நோக்குடன் 
                                                                                                              உங்கள்
                                                                                                         தமிழ் ஓவியா